Site icon Tamil News

வங்கதேசத்தின் டாக்கா சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது!

வங்கதேசத்தில் உள்ள டாக்கா சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

விமான நிலையம் ஆறு மணி நேரம் மூடப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் இராணுவம் தெரிவித்துள்ளது.

விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், வங்கதேசம் வரும் சில விமானங்கள் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டாக்காவில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version