Site icon Tamil News

நாமல் ராஜபக்சவிற்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்ற பந்துல குணவர்தன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கட்சியின் ஒழுக்கத்தை மீறியதாக தெரிவித்து அமைச்சர் பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ தனக்கு அறிவிக்காமல் ஹோமாகம அரசியல் குழு கூட்டத்தை ஏற்பாடு செய்ததாக அமைச்சர் பந்துல குணவர்தன இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அவ்வாறான விடயத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிடம் கேட்ட போது, ​​முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனக வெலிவத்த அவர்களின் அழைப்பின் பேரிலேயே தாம்  அவரது வீட்டிற்கு சென்றதாக தெரிவித்தார்.

அங்கு தேநீர் வைபவம் ஒன்றில் தானும் கலந்து கொண்டதாகவும், கட்சி உறுப்பினர்கள் பலரும் தம்மை சந்திக்க வந்ததாகவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் அமைச்சர் பந்துல குணவர்தன அண்மைக்காலமாக நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு கூட வரவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version