Site icon Tamil News

இலங்கை கால்பந்து சம்மேளனம் மீதான தடை நீக்கம்!

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் மீதான தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு FIFA தீர்மானித்துள்ளது.

FIFA இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அங்கத்துவத்தை 2023 ஜனவரி மாதம் 21ஆம் திகதியன்று இடைநிறுத்தியது.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை விளையாட்டு அதிகாரிகளிடம் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் இலங்கை விளையாட்டு அமைச்சின் சிறந்த பதிலை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் நேற்று (27) எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், செப்டம்பர் 29 அன்று புதிய FFSL செயற்குழுவிற்கான தேர்தல் நடைபெறும் வரை FIFA மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும் என்று அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

Exit mobile version