Site icon Tamil News

பம்பலப்பிட்டி- பாதுகாப்பு பணியில் இருந்த கான்ஸ்டபிள் மீது கத்திக்​குத்து

பம்பலப்பிட்டி பொன்சேகா வீதியில், அளுத்கடை இலக்கம் 06 இல் அமைந்துள்ள நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளை ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருபர், உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை கழற்றும் சத்தம் கேட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் தப்பியோட முயற்சித்தனர். அதிலொருவரே கத்தியால் பொலிஸ் கான்ஸ்டபிளை சரமாரியாக வெட்டிவிட்டு ஓடிவிட்டார்.

கான்ஸ்டபிளின் வலது கை வெட்டப்பட்டதாகவும், சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version