Site icon Tamil News

ஆசிரியையின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்த மாணவன் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பெண் ஆசிரியை ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் எடிட் செய்த அதே பாடசாலை மாணவர் ஒருவரை தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் ரந்திகா லக்மால் ஜயலத் இன்று (11) உத்தரவிட்டுள்ளார்.

வெலிபன்னகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவனே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த புகைப்படங்களை திருத்த வேண்டாம் எனவும், சாட்சியங்களில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடாது எனவும், அவ்வாறு செய்ததாக தெரிவிக்கப்பட்டால் அவரின் பிணை இரத்துச் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை விளக்கமறியலில் வைக்கப்படும் எனவும் நீதவான் சந்தேக நபரை எச்சரித்துள்ளார்.

சந்தேகநபரை ‘பி’ ரிப்போர்ட் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார், ஆசிரியையின் புகைப்படங்களை சந்தேக நபர் வெளியிட்டதால், பாதிக்கப்பட்ட அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், இவ்வாறு வெளியான காணொளிகளை அவதானித்த சிலர் ஆசிரியருடன் தொடர்பு கொண்டதாகவும், அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றதை ஆசிரியர் அறிந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் அந்த குழுக்களின் பொறுப்பை ஏற்க முடியாது என சந்தேகநபரின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இவ்வழக்கில் சாட்சியமாக முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் மிகவும் சிறியவர்கள் என சுட்டிக்காட்டி, சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு நீதவானிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version