சிங்கப்பூருக்கு சென்றுக் கொண்டிருந்த விமானத்தில் 31,000 வெள்ளியைத் திருடியதாகப் பயணி ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
16ஆம் திகதி வியட்நாமில் இருந்து புறப்பட்ட Scoot விமானத்தில் 52 வயதான Zhang Xiuqiang திருடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சீனாவைச் சேர்ந்த அந்த நபர் 3 பயணிகளின் பைகளிலிருந்து ரொக்கத்தைத் திருடியதாக நம்பப்படுகிறது.
ஸாங் மீது மூன்று குற்றச்சாட்டுகள் பதிவாயின. அவர் விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Zhang Xiuqiang இன்று மீண்டும் நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்படுவார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மூவாண்டுவரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லும் இரண்டும் விதிக்கப்படலாம்.