Tamil News

அகில இலங்கை ரீதியில் பளு தூக்கல் போட்டியில் சாதனை படைத்த மாணவிகளுக்கு கௌரவிப்பு

அகில இலங்கை பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் சாதனை படைத்த மாணவிகளுக்கான
கௌரவிப்பு நிகழ்வு இன்றையதினம் (25.09.2023) வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் சமூகத்தினரால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த செப்டம்பர் 16,17,18 ஆகிய தினங்களில் பொலன்னறுவை ராஜகிரிய வித்தியாலயத்தில் நடைபெற்ற பளு தூக்கல் போட்டியில் சாதனை படைத்த மாணவிகளையும் அவர்களின் பயிற்றுவிப்பாளர் ஞா.ஜுவன் அவர்களையும் இவர்களிற்கு பொறுப்பாசிரியர்களான திருமதி J.D ரெஜினோல்ட், திருமதி அகிலா, திருமதி நடோஜினி ஆகியோரையும் பாராட்டும் விதமாக இந் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வினை பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி மரிய டெய்சி செபமாலை ,பிரதி அதிபர் ஸ்ரீரங்கநாதன், ஆசிரியர் மற்றும் பாடசாலை சமூகத்தினர் ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தனர்.

Exit mobile version