Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம்!

மெல்போர்னில் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரெலிய நேரப்படி இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் மார்னிங்டன் பகுதியில் 2.4 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது பூமிக்குள் சுமார் 08 கிலோமீற்றர் ஆழத்தில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது.

கடந்த 29ம் திகதி இரவு 11.40 மணியளவில் சன்பரி பகுதியை மையமாக கொண்டு 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அப்போது போரோனியா பகுதிக்கு அருகே கடந்த 30ம் திகதி 2.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Exit mobile version