Site icon Tamil News

உலகில் அதிக சைபர் தாக்குதல்கள் நடைபெறும் நாடுகளில் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த இடம்!

உலகில் அதிக சைபர் தாக்குதல்கள் நடைபெறும் நாடுகளில் ஆஸ்திரேலியா 6வது இடத்தில் உள்ளது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 19 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கிட்டத்தட்ட 50 மில்லியன் கணக்குகள் சமரசம் செய்யப்பட்டுள்ள நிலையில், உலகில் அதிக எண்ணிக்கையிலான சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவாகும்.

இது முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 830 சதவீதம் அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா – ஸ்பெயின் – பிரான்ஸ் – துருக்கி ஆகிய நாடுகள் முறையே முதல் 05 இடங்களைப் பிடித்துள்ளன.

இந்தியா 07வது இடத்திலும், இத்தாலி 08வது இடத்திலும், கிரேட் பிரிட்டன் 09வது இடத்திலும், பிரேசில் 10வது இடத்திலும் உள்ளன.

Exit mobile version