Site icon Tamil News

உக்ரைன் அதிபரை கொல்ல முயற்சி: உளவு பார்த்த பெண் கைது

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நாளுக்கு நாள் போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மீது கொலை முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி எதிர்காலத்தில் தெற்கு உக்ரைனில் உள்ள மைலகோவ்விற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அந்த பயணம் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த பெண் தொலைபேசி செய்திகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் குறித்த அவரது கையால் எழுதப்பட்ட குறிப்புகளுடன் கைது செய்யப்பட்டதாக உக்ரேனிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

Exit mobile version