ஈரான் மீதான தாக்குதல் தேவைப்படும்வரை தொடரும் – இஸ்ரேல் முழுக்கம்!

ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை  தேவைப்படும் வரை” தொடரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இன்று ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்கள் மத்திய கிழக்கில் ஒரு புதிய மோதலுக்கு வழிவகுத்தன. ஈரான் முன்னெடுத்த பதிலடி தாக்குதல் நடவடிக்கையில் சுமார் 60 பாடசாலை மாணவிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் ஈரானிய மக்களின் சுதந்திரத்திற்காக தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.