Site icon Tamil News

பப்புவா நியூ கினியில் பழங்குடியின குழுவினர் கடும் மோதல் – 26 பேர் பலி

பப்புவா நியூ கினியின் வடக்கு மலைப்பகுதிகளில் பழங்குடியின குழுவினர் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

53 பேர் இறந்துவிட்டதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் பாதுகாப்புப் படையினர் பின்னர் இறந்தவர்களின் எண்ணிக்கையை 26 ஆகக் குறைத்துளளது.

எங்கா மாகாணத்தில் இரு பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட குறித்த மோதலில் பழங்குடியின குழுவொன்றை சேர்ந்தவர்கள், அங்கு பதுங்கியிருந்ததாக கூறப்படும் மற்றுமொரு பழங்குடியினர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள போதிலும் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் கண்டறியப்படவில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் நில உரிமை தொடர்பாக நீண்ட காலமாக, சில பழங்குடியின குழுவினர்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்று வருவதாக அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version