Site icon Tamil News

நைஜீரியாவில் தொடரும் பதற்றம்: 140 போ் படுகொலை

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இரு பழங்குடியின குழுக்களிடையே கடந்த 2 நாள்களாக நடந்து வரும் மோதலில் 140 போ் உயிரிழந்துள்ளனர் .

பிளேட்டூ மாகாணத்தின் பல்வேறு தொலைதூர கிராமங்களுக்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தவா்கள் அங்கிருந்தவா்கள் மீது கடந்த 2 நாள்களாக தாக்குதல் நடத்தினர்.

இதில் சுமாா் 140 போ் உயிரிழந்ததை சா்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டா்நேஷனஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், கால்நடைகளை மேய்க்கும் நாடோடி பழங்குடி இனத்தைச் சோ்ந்த ஃபுலானி இனத்தைச் சோ்ந்த ஆயுதக் குழுவினா்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் வடமேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் இத்தகைய வெகுஜனக் கொலைகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது, அங்கு நிலம் மற்றும் நீர் அணுகல் தொடர்பான பல தசாப்தங்களாக மோதல்கள் குறுங்குழுவாதத்தை மேலும் மோசமாக்கியது.

இதுபோன்ற தாக்குதல்களில் கைது செய்வது அரிதாக இருந்தாலும், மற்ற பாதுகாப்பு ஏஜென்சிகளின் உதவியுடன் சந்தேக நபர்களைத் தேடும் “அழிவு நடவடிக்கைகளை” தொடங்கியுள்ளதாக நைஜீரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

Exit mobile version