Site icon Tamil News

அர்ஜென்டினாவில் புயல் தாக்கியதில் 14 பேர் பலி

பலத்த மழை மற்றும் கடுமையான காற்றுடன் கூடிய சக்திவாய்ந்த புயல் தாக்கத்தால் அர்ஜென்டினாவில் 14 பேரும் உருகுவேயில் மேலும் இருவர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மணிக்கு 150 கிலோமீட்டர் (93 மைல்) வேகத்தில் வீசிய புயல் காற்று, பாஹியா பிளாங்கா நகரில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியின் போது விளையாட்டு வசதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளதாக நகரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலே, உதவி முயற்சிகளை ஒருங்கிணைக்க பல அமைச்சர்களுடன் பஹியா பிளாங்காவிற்குச் சென்றார்.

Exit mobile version