Site icon Tamil News

கை, கால்கள் இன்றில் கால்வாயில் காணப்பட்ட சடலம்

கலாவெவ தேசிய பூங்காவில் உள்ள கால்வாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் ஒருவரின் சடலம் கல்கிரியாகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இன்று (06) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கல்கிரியாகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கலாவெவ தேசிய பூங்காவிற்கு சொந்தமான பலலுவெவ இஸ்மத்தே கல்கொடவல பிரதேசத்தில் உள்ள கால்வாயில் சடலம் மிதந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதுடன், உடலில் இருந்து இரண்டு கைகள் மற்றும் ஒரு கால் காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை, இது இயற்கை மரணமா அல்லது கொலையா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில், கெக்கிராவ நீதவானால் இன்று பிற்பகல் ஸ்தல விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது, அங்கு கெக்கிராவ நீதவான் முன்னிலையில் கால்வாயில் இருந்து சடலம் மீட்கப்பட்டது.

சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் கெக்கிரவ பொலிஸாருக்கு வழங்கிய உத்தரவின் பிரகாரம், கல்கிரியாகம பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையின் கண்காணிப்பு வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version