Site icon Tamil News

ஆஸ்திரேலியாவுக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே நியமனம்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றி வரும் கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே விரைவில் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கோபால் பாக்லேவுக்குப் பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Exit mobile version