Tamil News

திருமணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்தார் அனுஷ்கா

நடிகை அனுஷ்கா தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது அவரது நடிப்பில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது.

அனுஷ்கா நடிப்பில் இறுதியாக பாகுபலி 2 படம் வெளியானது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது மூன்று வருட இடைவெளிக்கு பிறகு அவரது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம் ரிலீசாகியுள்ளது. என்டர்டெயின்மெண்ட் ஜானரில் வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்த மூன்று ஆண்டு இடைவெளி தனக்கு தேவைப்பட்டதாகவும் தற்போது தான் மிகவும் தெளிவுடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கதைகளை கேட்டு வருவதாகவும் அனுஷ்கா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

நல்ல கதைகள் அமைந்தால் எந்த மொழிப் படமாக இருந்தாலும் நடிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தராபாத்தில் பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், திருமணம் என்பது இயல்பாக நடக்க வேண்டும் இதுகுறித்த கேள்விக்கு என்ன பதில் அளிப்பது என்று தனக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணம் தற்போது இல்லை என்றும் அதற்கான நேரம் வரும்போது அது கண்டிப்பாக நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திருமணம் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்றும் அது அமையும்போது அனைவருடனும் பகிர்ந்து கொள்வேன் என்றும் அனுஷ்கா மேலும் கூறியுள்ளார்.

Exit mobile version