Site icon Tamil News

06 நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்த அனுர : காரணம் என்ன?

தேசிய மக்கள் படையின் தலைவர்  அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் 06 நாடுகளின் இராஜதந்திர அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (07.03) சந்திப்பொன்று இடம்பெற்றது.

பெலவத்தை ஜனதா விமுக்தி பெரமுன கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதில் பாலஸ்தீனம், துருக்கி, பங்களாதேஷ், இந்தோனேசியா, மலேசியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

அங்கு தேசிய மக்கள் படையின் பொருளாதார கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலம் நெருங்கி வருகின்ற நிலையில் அனுர குமார அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார். இதனையடுத்து பல்வேறு நாடுகளின் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்து வருவது பெருமளவு கவனத்தை ஈர்த்துள்ளது.

Exit mobile version