Tamil News

துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ் கூட்டணியில் இணைந்த அனுபமா!

துருவ் விக்ரம்- மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இணைந்துள்ளார். இந்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு படம் குறித்த வேறு சில அப்டேட்களையும் கொடுத்துள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு ஒரு படம் இயக்குவதாகவும் இதனை இயக்குநர் ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பதாகவும் முன்பு அறிவிக்கப்பட்டது. இப்போது நீலம் புரொடக்‌ஷன்ஸூடன் அப்ளாஸ் எண்டர்டெய்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தின் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் தனுஷூடன் தமிழில் ‘கொடி’ படத்தில் நடித்துப் பிரபலமானவர்.

துருவ் விக்ரம்- மாரிசெல்வராஜ்

அனைத்து தரப்பிலும் எதிரிகள் சூழ்ந்த இந்த உலகத்தில் துணிச்சலையும், தைரியத்தையும் வாழ்வியலாக கொண்ட இளைஞனின் கதையை சொல்கிறது இந்த திரைப்படம். ஒரு மனிதன் விளையாட்டையே துப்பாக்கி போன்ற வலிமை மிக்க ஆயுதமாக ஏந்தி, வன்முறையற்ற, அமைதியான, மரணமற்ற வாழ்க்கையை வாழ்வதற்காக போராடும் போராட்டமே இந்தப் படத்தின் கதை.

படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், ”ரஞ்சித் அண்ணாவுடன் நான் இணைந்த முதல் படம் ‘பரியேறும் பெருமாள்’. அந்தப் படம் இவ்வளவு உயரம் எட்டியதற்கு அவர் ஒரு முக்கிய காரணம். என்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு அது ஒரு படிக்கல்லாக அமைந்தது. அவருடன் மீண்டும் ஒரு முறை இணைந்து பணியாற்றுவது உற்சாகத்தை அளிக்கிறது. இந்த திரைப்படம் கபடி என்னும் விளையாட்டின் வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இருக்கும். இந்தத் திரைப்படத்தில் வலிமையாகவும் திறமையான இளைஞனாகவும் துருவ் விக்ரம் வித்தியாசமான கோணத்தில் திரையில் தோன்றுவார்” என்றார்.

Exit mobile version