Site icon Tamil News

அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு பொலிசார் சோதனை..!!

புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காய் காடு கிராமத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பழனிவேல் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை பொலிசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் வட்டார வளர்ச்சி அலுவகங்களுக்கு பிளீச்சிங் பவுடர் பில் புக் உள்ளிட்ட பொருட்கள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக இருந்த குற்றச்சாட்டு அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை பொலிசார் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2018-19 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களுக்கு ப்ளீச்சிங் பவுடர் பில் புக் உள்ளிட்ட தளவாட பொருட்கள்  விநியோகம் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக அன்றைய மாவட்ட ஆட்சியர் மலர்விழி ஒன்றிய ஆணையர்கள் 10 பேர் மற்றும் ஒப்பந்ததாரர் பழனிவேல் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட ஊழல் புகாரின் அடிப்படையில் பஞ்சாமித்திரர் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version