Site icon Tamil News

ஆசிரியரை ஆயுதத்தால் தாக்கிய மற்றுமொரு ஆசிரியர் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பதுளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஆசிரியர் ஒருவரை ஆயுதத்தால் தாக்கி மற்றுமொரு ஆசிரியர் காயப்படுத்திய சம்பவம் ஒன்றுபதிவாகியுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான ஆசிரியர் நேற்று பதுளை மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதன்போது அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர் 46 வயதுடைய ஆசிரியை ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காயமடைந்தவர் 44 வயதுடைய ஆசிரியை ஒருவரெனவும், அவர் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆசிரியர்கள் இருவரும் வெவ்வேறு பாடசாலைகளில் கடமையாற்றிவருபவர்கள் எனவும், கடந்த 18 ஆம் திகதி காலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பதுளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version