Site icon Tamil News

ஜெர்மனியில் அகதி நிலை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மற்றுமொரு நெருக்கடி

ஜெர்மனியில் அகதி நிலை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற சமூக உதவி பணம் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் மேற்கொண்டு அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு சமூக உதவி பணமானது குறைந்த அளவில் கிடைக்க வேண்டும் என்று பயண் மாநிலத்தினுடைய ஆளும் கட்சியின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இக்கட்சியுடைய தலைவர் மார்கோ சுவிட் பத்திரிகையாளர் முன் இவ்வாறான கருத்தை முன்வைத்துள்ளார்.

அதாவது மற்றைய ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறு அகதி விண்ணப்பம் மேற்கொண்டவர்களுக்கு பின்னர் அவர்களின் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் குறைந்த அளவில் சமூக உதவி பணத்தை வழங்கப்படுவதாகவும், இந்நிலையில் ஜெர்மன் நாட்டில் சாதாரண கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இதன் காரணத்தினால் மக்கள் ஜெர்மன் நாட்டுக்கு வந்து அகதி விண்ணப்பம் மேற்கொண்டார்கள் என்றும் அவர் சுட்டி காட்டி இருக்கின்றார்.

இந்நிலையில் இந்த கட்சியுடைய பாராளுமன்ற குழு தலைவரான டோங் ரிங் அவர்கள் எதிர்வரும் காலங்களில் அகதிகளுக்கு குறிப்பிட்ட வேலைகளை கொடுக்க வேண்டும்.

அவ்வாறு அவர்கள் வேலை செய்வதை தவிர்த்தால் அவர்களுக்கு கொடுக்கப்படும் சமூக உதவி பணத்தை குறைந்த அளவில் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

Exit mobile version