Site icon Tamil News

இலங்கை வரும் மற்றுமொரு சீனக் கப்பல்!!! அச்சப்படும் இந்தியா

மற்றொரு சீன ஆராய்ச்சிக் கப்பல் ஜனவரி மாதம் நாட்டிற்கு வர அனுமதி கோரியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பல் ஜனவரி ஐந்தாம் திகதி முதல் மே மாதம் வரை இந்தியப் பெருங்கடலை ஆய்வு செய்ய வேலை செய்வதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தித் தளம் கூறுகிறது.

அதன் போது, குறித்த கப்பல் இலங்கை மற்றும் மாலைத்தீவில் நங்கூரமிடவுள்ளதுடன், இலங்கை மற்றும் மாலைத்தீவில் அதற்கான கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்திய அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளதுடன், இந்தியப் பெருங்கடல் ஆய்வுகளை அனுமதிப்பது பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version