Site icon Tamil News

ரஷ்ய படைகள் பின்வாங்கியதாக அறிவிப்பு!

ரஷ்யா தனது படைகள் பின்வாங்கியுள்ளதாக அந்நாட்டின் பாதுகப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரேனிய தாக்குதல்களின் எழுச்சியை அதன் படைகள் முறியடித்துள்ளன தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தந்திரோபாய காரணங்களுக்காக அதன் துருப்புக்கள் ஒரு பகுதியில் பின்வாங்கிவிட்டதாகவும்  சுட்டிக்காட்டியது.

உக்ரைன் 95 கிமீ (59 மைல்கள்) நீளமுள்ள ஒரு முன்வரிசையில் 26 தாக்குதல் முயற்சிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட துருப்புக்களையும் 40 டாங்கிகளையும் நிலைநிறுத்தியுள்ளதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாஸ்கோவின் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சோலேடார் நகரின் திசையில் தாக்குதல்கள் நடந்ததாக அது கூறியது.

“உக்ரேனிய இராணுவப் பிரிவுகளின் அனைத்து தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டன எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version