Site icon Tamil News

இலங்கையில் கடந்த வருடம் (2022) உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான அறிவிப்பு!

கடந்த ஆண்டு (2022) நடைபெற்ற உயர்தரப் பெறுபேறுகள் தொடர்பான வெட்டுப்புள்ளிகள் இன்று (01.12) வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகளுக்கு 6 வாரங்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் தமது கற்கை பீடங்கள் தொடர்பான தகவல்களை அதிகாரிகள் வெளியிட முடிந்துள்ளதாக தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக இந்த தகவல்கள் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version