Site icon Tamil News

பிரித்தானியா மக்களுக்கு ஓர் அவசர செய்தி!

பிரித்தானியாவில் ஜுனியர் வைத்தியர்கள்  இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதன்படி நாளை (20.07) முதல் வரும் சனிக்கிழமை வரை வெளிநடப்பு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜுனியர் வைத்தியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அதற்கான தீர்வு கிடைக்கப்பெறாத நிலையில், பணிப்புறக்கணிப்பை நீட்டித்துள்ளனர்.

இதன்காரணமாக NHS சேவைகளை பெற்றுக்கொள்வதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அவசர சிகிச்சைகளுக்க முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தமானது எண்ணற்ற நோயாளிகளை பாதிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version