Site icon Tamil News

லண்டனிலிருந்து யாழ் வந்த முதியவரின் திருவிளையாடல்

லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த 60 வயது முதியவர், யாழில் 38 வயதான குடும்பப் பெண்ணுடனும் பெண்ணின் பதின்ம வயது மகளுடனும் தகாத உறவில் இருந்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாண தென்மராட்சியில் வசித்துவரும் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வாழ்ந்துவரும் நிலையில் , பெண் தனது தாயாருடனும் மகளுடனும் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பெண்ணின் தாயார் அண்மையில் மரணமடைந்ததாக கூறப்படும் நிலையில், தாயாரின் மரணச்சடங்கிற்கு வெளிநாட்டிலிருந்து வந்து தூரத்து உறவினரான 60 வயது நபர் அதே வீ்ட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் அவரது தொலைபேசி பழுதடைத்ததை அடுத்து தொலைபேசியில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக அப்பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரை லண்டன் நபர் அணுகியுள்ளார்.

இதன்போதே அவரது கைத் தொலைபேசியில் தாய் மற்றும் மகளுடன் அந்தரங்கமாக இருக்கும் காட்சிகள் பதிவு செய்து வைத்திருந்தமை அம்பலத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version