Site icon Tamil News

பாலஸ்தீனிய துப்பாக்கிதாரிகளால் இஸ்ரேலியர் ஒருவர் சுட்டுக்கொலை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒரு பிரதான சாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய பாலஸ்தீனிய துப்பாக்கிதாரிகளால் ஒரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு ஹமாஸின் ஆயுதப் பிரிவான போராளிப் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.

சந்தேகத்திற்கிடமான தாக்குதலாளிகளை பின்தொடர்வதாகவும், தேடுதல்களை நடத்துவதாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

காசா நகரில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்திருந்த பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Exit mobile version