Site icon Tamil News

பெருவில் ஈரானிய பிரஜை ஒருவர் கைது!

பெருவில் ஈரானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தென் அமெரிக்க நாட்டில் இஸ்ரேலிய பிரஜை ஒருவரை கொல்ல முற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் ஈரானின் குத்ஸ் படையில் உறுப்பினராக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெருவின் காவல்துறைத் தலைவர் ஜெனரல் ஆஸ்கார் அரியோலா, ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மஜித் அசிசி, என்ற 56 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வெளிநாட்டு உளவுத்துறை அலுவலகங்கள் அவரைப் பற்றி எச்சரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version