Site icon Tamil News

ஈரானில் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்து : 51 பேர் உயிரிழப்பு!

கிழக்கு ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 51 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தலைநகர் தெஹ்ரானில் இருந்து தென்கிழக்கே 540 கிமீ (335 மைல்) தொலைவில் உள்ள தபாஸில் உள்ள சுரங்கத்தின் இரண்டு தொகுதிகளில் மீத்தேன் வாயு வெடித்ததால் இவ் அனர்த்தம் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெடிவிபத்தின் போது அந்தத் தொகுதிகளில் 69 தொழிலாளர்கள் இருந்ததாக தெற்கு கொராசானின் ஆளுநர் ஜாவத் கெனாட்சாதே தெரிவித்துள்ளார்.

Exit mobile version