Tamil News

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த ஹரிகரன் தன்வந்தை கௌரவிக்கும் நிகழ்வு!

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்த திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஹரிகரன் தன்வந்தைக் கனடா திருக்கோணமலை நலன்புரிச் சங்கம் ஒரு இலட்சம்  ரூபாய் பரிசுத் தொகையும் வெற்றிக் கிண்ணமும் வழங்கிக் கௌரவித்துள்ளது.

கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கத் தலைவர்  ரகுநாதன், அதன் காப்பாளரும் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் தலைவருமாகிய  சண்முகம் குகதாசன் ஆகியோர் இணைந்து இந்த பரிசில்களை வழங்கி வைத்துள்ளனர்.

திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் மாணவர் ஒன்றுகூடலின் பொழுது நடைபெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வில்,  கல்லூரி முதல்வர், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தன்வந்தின் பெற்றோர் உள்ளடக்கிய பலரும்  கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் பொழுது உரை ஆற்றிய  சண்முகம் குகதாசன் அவர்கள் இச்சாதனை புரிந்த மாணவன் நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்திருப்பதாகவும் மென் மேலும் முன்னேறி ஒலிம்பிக் வரை செல்ல வேண்டும் எனவும் வாழ்த்தினார்.

Exit mobile version