Site icon Tamil News

பிரித்தானியாவில் அகதிகள் தங்கியுள்ள ஹோட்டல் ஒன்றின் மீது தாக்குதல்

பிரித்தானியாவில் சில நாட்களுக்கு முன்பு 17 வயது இளைஞர் ஒருவர் மூன்று சிறுமிகளை கத்தியால் குத்தி கொன்றார்.

ரொதர்ஹாமில் உள்ள அகதிகள் குழுவொன்று தங்கியுள்ள ஹோட்டல் ஒன்றின் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பல பகுதிகளில் கலவரம் வெடித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், அந்நாட்டில் பொலிஸ் அதிகாரிகளுடனான மோதலில் சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, பிரித்தானியா முழுவதும் பரவி வரும் கலவரம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் அலுவலகத்தில் விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Exit mobile version