Site icon Tamil News

மரணச் சடங்கிற்கு வந்தவர்களை கடத்திச் சென்ற ஆயுத குழு

நைஜீரியாவின் தென்மேற்கு மாகாணத்தில் உள்ள ஓட்டோவில் உயிரிழந்த நபருக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த இடத்திற்கு வந்த ஆயுதக் குழுவொன்றினால் சுமார் 25 பேர் கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கடத்தலுக்கான காரணம் அல்லது கடத்தலை மேற்கொண்டது யார் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Exit mobile version