Site icon Tamil News

ஜெர்மனியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 50 பேர்

ஜெர்மனியின் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான எஸன் நகரத்தில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

கடந்த 29ஆம் திகதி எஸன் நகரத்தில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதாவது 67 வயதுடைய வாகன சாரதியானவர் டிராம் ஒன்று வந்திருந்த பொழுது அதனுடன் மோதியதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணத்தினால் இந்த வாகன சாரதியானவர் உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரியவந்து இருக்கின்றது.

இந்த டிராம் பயணம் செய்த வீதி ஹல்டன் டுரோப்ஃ என்று சொல்லப்படுகின்ற வீதியானது பல மணித்தியாலங்களாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்து இருக்கின்றது.

இந்நிலையில் இந்த வாகன விபத்துக்காக காரணம் இது வரை கண்டுப்பிடிக்கவில்லை என்றும்.

டிராமில் பயணம் மேற்கொண்ட 50 பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரியவந்து இருக்கின்றது.

மேலும் பொலிஸார் இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணையை மேற்கொாண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version