Site icon Tamil News

ஜெர்மனியில் கோர விபத்தில் 18 வயதுடைய யுவதிக்கு நேர்ந்த பரிதாபம்

ஜெர்மனி நாட்டில் பாரிய வாகன விபத்து நிகழ்ந்துள்ள நிலையில், இந்த விபத்தில் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

30ஆம் திகதியன்று ஜெர்மனியின் அதிவேக போக்குவரத்து பாதை ஆ 43 இல் கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

அதாவது 18 வயதுடைய ஒரு பெண்ணானவர் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை உரிய காலத்தில் பெற்று கொண்டுள்ளார்.

இதேவேளையில் குறித்த பெண் வாகனத்தை ஓட்டும் போது தனது வாகனத்தால் விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த விபத்தின் போது 18 வயதுடைய யுவதி சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

இந்நிலையில் அதிவேக போக்குவரத்தில் வந்த மற்றைய வாகனம் இவருடைய வாகனத்தில் மோதியதினால் பாரிய விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் 16 பேர் வரை காயப்பட்டுள்ளதாகவும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டடுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தொரியவந்துள்ளது.

Exit mobile version