Site icon Tamil News

ஹிக்கடுவ பகுதியில் 18 வயதுடைய பெண் ஒருவர் மாயமாகியுள்ளதாக தகவல்!

கடந்த 15ஆம் திகதி முதல் 18 வயதுடைய யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலி தொடம்துவ பிரதேசத்தில் வசிக்கும் இவர், 15 ஆம் திகதி  காலி பிரதான பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தார்.

இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் பொதுமக்கள் தமக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து அவரது தாயார் கூறுகையில், “கடந்த 17ம்  திகதி இரவு 9.28 மணிக்கு போன் வந்தது. என் பொண்ணுதான் போன் பண்ணியது. ப்ளீஸ் அம்மா என்னைத் தேடாதீங்க. நான் வர மாட்டேன். போலீசுக்கு போக வேண்டாம். அதே சமயம், அங்கிருந்த ஒரு பெண் என்னிடம் போலீசுக்கு போக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version