Site icon Tamil News

வேற்றுகிரகவாசிகளை மீட்ட அமெரிக்கா : பென்டகனின் முன்னாள் அதிகாரி தகவல்!

பென்டகனின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் அமெரிக்கா ‘வேற்றுகிரகவாசிகளை’ மீட்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.

முன்னாள் அமெரிக்க எதிர் உளவுத்துறை அதிகாரியும் ஒரு காலத்தில் பென்டகன் யுஎஃப்ஒ புலனாய்வாளருமான லூயிஸ் எலிசாண்டோ செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போது, 1947 இன் புகழ்பெற்ற ரோஸ்வெல் யுஎஃப்ஒ விபத்தில் இருந்து இரண்டு இனம் தெரியாத தோற்றங்கள் மீட்கப்பட்டதாக கூறியுள்ளார்.

அதில் ஒன்றை உறுதிப்படுத்த முடியும் எனக் கூறும் அவர், ‘நாம், ஒரு தேசமாக, வாகனங்கள் மீது மட்டும் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் அதில் பயணிப்போர் மீதும் ஆர்வம் காட்டுகிறோம், எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மேற்படி இனம் தெரியாத தோற்றங்களை உயிரியில் மாதிரிகள் என்று விவரித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்கத் தற்காப்புத் துறையில் தனது பங்கை விட்டு வெளியேறிய பிறகு, வரலாற்றில் மிகவும் பிரபலமான மூன்று யுஎஃப்ஒ வீடியோக்களை வெளியிடுவதற்கு அவர் உதவியுள்ளார்.

 

Exit mobile version