Tamil News

கையில் குழந்தை – கணவருக்கு உதட்டுடன் முத்தம்… முதன்முறையாக வெளியான படங்கள்

நடிகை அமலா பாலுக்கு ஜூன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இலை என்று அமலா பால் பெயர் வைத்து இருக்கிறார்.

குழந்தை பிறந்த பின்னும் இணையத்தில் கணவரோடு இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வந்த அமலா பால், ஓணம் பண்டிகையொட்டி தனது குழந்தையின் போட்டோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ரோமன் கத்தோலிக்க முறையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னரும் அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், ரிலீஸ் உள்ளிட்டவைகளை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்த அமலா பால், திருமண சில நாட்களிலே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனால், அவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தாரா என்ற சர்ச்சை எழுந்தது.

இதைத்தொடர்ந்து, நடிகை அமலா பாலுக்கு ஜூன் 11ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த போட்டோவை அமலா பால் இணையத்தில் வெளியிட்டு குழந்தைக்கு இலை (ILAI) என பெயர் வைத்து உள்ளதாக அறிவித்தார்.

குழந்தை பிறப்பிற்கு பிறகு கணவருடன் விதவிதமான போடடோக்களை வெளியிட்டு வந்த அமலா பால், முதன் முறையாக தனது குழந்தையின் போட்டோவை வெளியிட்டு ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள பாரம்பரிய உடையில் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு, கணவருக்கு முத்தம் கொடுத்துள்ளார்.

இந்த போட்டோவைப் பார்த்த ஃபேன்ஸ், வாவ், செம க்யூட் புள்ள லட்டு மாதிரி இருக்கு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இணையத்தில் இந்த போட்டோ டிரெண்டாகி வருகிறது.

Exit mobile version