Site icon Tamil News

ராணுவத்திற்கு எஞ்சியிருப்பது என்னைக் கொல்வது மட்டுமே – இம்ரான் கான்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன்னைப் போன்ற அரசியல் தலைவர்கள் சிறையில் வாடும் நாட்டில் உள்ள வருந்தத்தக்க நிலை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார், மேலும் சக்திவாய்ந்த இராணுவத் தலைமைக்கு எஞ்சியிருப்பது அவரை “கொலை” செய்வதே என்றார்.

சர்ச்சைக்குரிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் இருந்து இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

“இராணுவ ஸ்தாபனம் எனக்கு எதிராக தங்களால் இயன்ற அனைத்தையும் செய்துவிட்டது. அவர்களுக்கு எஞ்சியிருப்பது என்னைக் கொலை செய்வதுதான்” என்று திரு கான் தெரிவித்துள்ளார்.

“எனக்கோ என் மனைவிக்கோ (புஷ்ரா பீபி) ஏதாவது நேர்ந்தால், ஜெனரல் அசிம் முனீர் பொறுப்பேற்க வேண்டும் என்று நான் பகிரங்கமாக கூறியுள்ளேன். ஆனால் எனது நம்பிக்கை வலுவாக இருப்பதால் நான் பயப்படவில்லை. அடிமைத்தனத்தை விட மரணத்தையே விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

Exit mobile version