Site icon Tamil News

4 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு பயணத்தை ஆரம்பித்த தாய் ஏர்வேஸ்

நான்கு வருடங்களின் பின்னர் தாய் எயார்வேஸ் விமானம் TG 307 நேற்று இரவு 11.55 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு பயணித்த அந்த விமானத்தில் தாய்லாந்து பிரஜைகள் உட்பட 150 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.

இந்த விமானம் இன்று காலை 7.05 மணியளவில் தாய்லாந்துக்குத் திரும்பியுள்ளதாகவும், தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகள் தினமும் இடம்பெற்று வருவதாகவும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விமானம் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வந்ததாகவும், விமான நிலையம் மற்றும் விமான நிறுவனமும் சில சிறப்பு கலாச்சார நடனங்களை நிகழ்த்தியதாகவும் அமைச்சு கூறுகிறது.

Exit mobile version