Site icon Tamil News

பாலியல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தனுஷ்கா 11 மாதங்களுக்குப் பிறகு நாடு திரும்பினார்

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க நேற்று இரவு இலங்கை வந்தடைந்தார்.

11 மாதங்களுக்குப் பிறகு அவர் நாட்டுக்கு ந்தார். அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட தனுஷ்கா இலங்கைக்கு வந்தார்.

இதுதொடர்பான சம்பவத்தையடுத்து, இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளும் தனுஷ்க குணதிலாவுக்கு தற்காலிக கிரிக்கெட் தடை விதித்தனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு இருப்து உலகக் கோப்பை போட்டியின் போது, ​​டிண்டர் மூலம் அடையாளம் காணப்பட்ட 29 வயது இளம்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தனுஷ்க குணதிலக்க மீது உள்ளூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் அணியினர் தங்கியிருந்த ஹோட்டலில் வைத்து தனுஷ்க குணதிலக்கவை சிட்னி பொலிஸார் கைது செய்தனர்.

பின்னர் அவர் கடுமையான ஜாமீன் நிபந்தனைகளில் விடுவிக்கப்படுவதற்கு முன்பு சிட்னியில் உள்ள தடுப்பு மையத்தில் கிட்டத்தட்ட 11 நாட்கள் வைக்கப்பட்டார்.

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த 21ஆம் திகதி சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், தனுஷ்க குணதிலக்கவை விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இலங்கை வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தனுஷ்க குணதிலக்க, விளையாட்டில் இருந்து பெற்ற அனுபவத்தினால் 11 மாதங்களுக்கும் மேலாக இந்த அழுத்தத்தை தாங்கியதாக தெரிவித்தார்.

பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தை தொடர்ந்து தனுஷ்க குணதிலவிற்கு விதிக்கப்பட்ட தடை இதுவரை நீக்கப்படவில்லை.

பல ஒழுக்க மீறல்களில் ஈடுபட்டதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், அவர் மீண்டும் விளையாடுவதற்கு நிபந்தனைகளை விதிக்க நேரிடலாம் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Exit mobile version