Site icon Tamil News

பிரிக்ஸ் அமைப்பில் சேர ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா கோரிக்கை

பிரிக்ஸ் அமைப்பு என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா என 5 நாடுகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பு ஆகும்.

இவை வளர்ந்து வரும் அல்லது புதிதாக தொழில்மயமாகி வரும் நாடுகள் ஆகும். இதில் தென் ஆப்பிரிக்கா இந்த ஆண்டுக்கான தலைமை பொறுப்பை வகித்து வருகிறது.

இந்தநிலையில் பிரிக்ஸ் அமைப்பில் சேருவதற்காக ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா கோரிக்கை விடுத்துள்ளது.

எத்தியோப்பியா ஏற்கனவே ஆப்பிரிக்க ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, அணிசேரா இயக்கம் போன்ற பல பன்னாட்டு அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.

எனினும் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் சர்வதேச சூழ்நிலை மற்றும் சர்வதேச படைகளின் மாற்றத்தை கணக்கில் கொண்டு தேசிய நலனை பாதுகாப்பதற்காக பிரிக்ஸ் அமைப்பில் சேர எத்தியோப்பியா முடிவு எடுத்துள்ளது என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடக பேச்சாளர் மெல்ஸ் அலெம் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version