Site icon Tamil News

பாலியல் வன்கொடுமை; சித்திக் மீது இளம் நடிகை புகார்

நடிகர் சித்திக் தன்னை ஓட்டலில் பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் நடிகை ஒருவர்  புகார் அளித்துள்ளார்.

இது குறித்து பொலிஸ் மா அதிபருக்கு மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இளம் நடிகை ரேவதி சம்பத், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு சித்திக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

சித்திக் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் நடிகை கூறியிருந்தார்.

2016ல், ஒரு திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிக்குப் பிறகு, திருவனந்தபுரம் மஸ்காட் ஹோட்டலில் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு வயது 21, அவரை மோலி என்று அழைத்தார். நடிகை அங்கு சென்றபோது தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஊடகங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

பாலியல் குற்றச்சாட்டை அடுத்து பொதுச் செயலாளர் பதவியை சித்திக் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து நடிகை மீது சித்திக் பொலிசில் புகார் அளித்தார்.  அந்த  புகாரில், இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரல் இருப்பதாகவும், நடிகை வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு குற்றச்சாட்டுகளை கூறியதாகவும் சித்திக் கூறியுள்ளார்.

முன்பெல்லாம் முன்வைக்கப்படாத பலாத்காரக் குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

சித்திக் மேலும் நடிகையை அவரது பெற்றோருடன் சந்தித்ததே இல்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகை மினு முனீர் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் பாலியல் புகார் அளித்துள்ளார்.

நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, இவள பாபு, மணியன்பிள்ளை ராஜு மற்றும் தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்கள் நோபல், விச்சு, வழக்கறிஞர்கள் காங்கிரஸ் மாநிலத் தலைவரும், தயாரிப்பாளருமான வி.எஸ். சந்திரசேகரன் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டது.

Exit mobile version