Tamil News

மனம் திறந்து ராஷ்மிகா,விஜய் தேவரகொண்டாவிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் நானி!

விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா இருவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் நானி. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது ‘ஹாய் நானா’ திரைப்பட புரோமோஷன் விழாவில் இவர்கள் இருவரையும் தொடர்பு படுத்தி புகைப்படம் ஒன்று வெளியானதே இதற்கு காரணம்.

நடிகர் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் நடிப்பில் ‘ஹாய் நானா’ திரைப்படம் டிசம்பர் 7ம் திகதி வெளியாக இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் ‘ஹாய் நானா’ திரைப்படத்தின் புரமோஷன் விழா நடைபெற்றது. அதில் ஒரு செக்மெண்டில் நடிகர் விஜய்தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் மாலத்தீவில் ஒரே இடத்தில் இருக்கும் படியான தனித்தனியான புகைப்படத்தை இணைத்து அதில் காண்பிக்கப்பட்டது.

Nani lands in controversy for 'Vijay Deverakonda-Rashmika' picture

இது குறித்த கருத்து தெரிவிக்க வேண்டும் என அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது. இந்த ஒரு விஷயம் தான் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையானது.

என்னதான் நடிகர்களாக இருந்தாலும் அவர்களது தனிப்பட விஷயத்தை பட புரமோஷன் என்ற பெயரில் இப்படி பொதுவெளியில் பகிர வேண்டுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இது குறித்து தற்பொழுது நடிகர் நானி மனம் திறந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த விஷயம் குறித்துத் தனக்கு முன்பே தெரியாது எனவும், இது தான் எதிர்பாராத ஒரு விஷயம் எனவும் இதற்காக இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என நானி தெரிவித்துள்ளார்.

Exit mobile version