Site icon Tamil News

இலங்கையில் பாணிற்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை

இலங்கையில் பாணிற்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

பாண் பல்வேறுபட்ட விலைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இது தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

எனவே, பாணின் விலையைக் குறைக்க வெதுப்பக உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில் பாண் இறாத்தலுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version