Site icon Tamil News

ரஷ்ய பகுதியில் இருந்து குழந்தைகளை வெளியேற்ற நடவடிக்கை!

உக்ரேனியப் பகுதியில் இருந்து தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடத்தப்படுவதால், அந்த பகுதியில் இருந்து சுமார் 9,000 குழந்தைகளை வெளியேற்ற ரஷ்ய எல்லைப் பகுதி திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

குழந்தைகள் உக்ரைன் எல்லையில் இருந்து மேலும் கிழக்கு நோக்கி நகர்த்தப்பட உள்ளனர் என்று ரஷ்யாவின் பெல்கோரோட் எல்லைப் பகுதியின் ஆளுநர் வியாசெஸ்லெவ் கிளாட்கோவ் கூறினார்.

நீண்ட தூர உக்ரேனிய தாக்குதல்கள் மற்றும் எல்லை தாண்டிய தாக்குதல்களில் இருந்து எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்க கிரெம்ளின் ஒரு இடையக மண்டலத்தை உருவாக்க விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறிய நிலையில் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவிற்குள் ஆழமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கிடங்குகளைத் தாக்க உக்ரைன் அதன் நீண்ட தூர துப்பாக்கிச் சக்தியைப் பயன்படுத்துகிறது.  இது புட்டினுக்கு அரசியல் ரீதியாக அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

Exit mobile version