Site icon Tamil News

சீனாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக டோங் ஜுனை நியமிக்க நடவடிக்கை!

சீனாவின் முன்னாள் கடற்படைத் தலைவர் டோங் ஜுனை நாட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக லீ ஷாங்ஃபு பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த நிலையில், அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் மர்மமான முறையில் காணாமல்போனார்.

இந்நிலையில் புதிய பாதுகாப்பு அமைச்சரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் தைவானில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே தைவானை தனது ஒருங்கிணைந்த பகுதியாக சீனா அறிவித்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த பதற்றங்களுக்கு மத்தியில் புதிய பாதுகாப்பு அமைச்சரின் நியமனமானது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Exit mobile version