Site icon Tamil News

இலங்கையில் கடவுச்சீட்டுகளுக்கு காத்திருப்பவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை

750,000 வெற்று கடவுச்சீட்டுகள் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் கையிருப்பு ஒக்டோபர் மாத இறுதிக்குள் அல்லது அதற்கு முன்னதாக பெற்றுக்கொள்ளப்படும் என திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே வெளிநாட்டு நிறுவனத்திற்கு கடவுச்சீட்டுகள் வழங்குவதற்கான விலைமனுக்கோரல் சர்வதேச கட்டணங்களை அழைத்து விலைமனுக்கோரல் விடப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து 750,000 சாதாரண வெற்று கடவுச்சீட்டுகள் கொள்வனவு செய்யப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தற்போது குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் இருப்பதால் கடவுச்சீட்டுகளை வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version