Site icon Tamil News

டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

நியூயார்க் நீதிபதி ஒருவர் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூயார்க் டைம்ஸ் மற்றும் அதன் மூன்று பத்திரிகையாளர்களுக்கு கிட்டத்தட்ட $400,000 செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த பத்திரிக்கையாளர்கள் டொனால்ட் ட்ரம்பின், குடும்பம் மற்றும் சொத்து குறித்து எழுதிய Pulitzer Prize வின்னிங் கட்டுரையை எழுதியமைக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் மருமகள் மேரி டிரம்ப் செய்தியாளர்களிடம் கொடுத்த ரகசிய வரி பதிவுகளின் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இது தொடர்பில் பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று (12.01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிபதி குறித்த மூன்று பத்திரிக்கையாளர்கள். மற்றும் செய்திதாளுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ததுடன், மேற்படி உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

Exit mobile version