Site icon Tamil News

பிரித்தானியாவில் சட்டத்தரணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

பிரித்தானியாவில்  பொய்யான காரணங்களைக்கூறி, சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்களுக்கு உதவும் சட்டத்தரணிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சூயெல்லா பிரேவர்மேன், இதற்கான செயலணி ஒன்றையும் பிரித்தானிய அரசு அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பணத்துக்காக, பொய்யான காரணங்களைக் கூறி, புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு முன்வந்த சட்டத்தரணிகள் பலரை, பொருளாதார அகதி போன்று நடித்த பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர் அண்மையில் அம்பலப்படுத்தினார்.

இதனையடுத்தே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,

சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்துவதற்கு பிரித்தானிய மக்கள் விரும்புகின்றனர். ஒழுக்கமற்ற சட்டத்தரணிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவும் சட்டவிரோத படகுகளை நிறுத்துவதற்கும் நான் உறுதிபூண்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version